ஐப்ரோ த்ரெட்டிங் செய்வதற்கு முன்… செய்த பின் இந்த விசயங்களை செய்யுங்க!

கண்புருவங்களை சீர் செய்யும்போது அதிலுள்ள சில முடிகளை நீக்குவதால் தாங்க முடியாத வலி இருக்கலாம். ஐப்ரோ திரட்டிங்கின்போது வேர்க்காலுடன் சேர்த்து முடிகளை அகற்றுவதால் இந்த வலி ஏற்படுகிறது.

இந்த வலியைத் தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளன. புருவங்களைத் திருத்த வேண்டுமென்று நினைத்தால் 2-3 வாரங்களுக்கு முன்பே நீங்கள் தயார் ஆக வேண்டும்.

புருவத்தில் நன்றாக முடி வளர்வதற்கு இந்த காலகட்டத்தை தாருங்கள். புருவம் நன்றாக வளர்ந்தபின்னர் திரெட்டிங் செய்யும்போது அதை அழகாக வில்போன்று வளைத்து மார்க் செய்து சிறப்பாக திரெட்டிங் செய்ய உதவும்.

அதேபோல் திரெட்டிங் செய்வதற்கு முன்பாக உங்கள் முகத்தை நன்றாகக் கழுவி விடவேண்டும். மேக்கப் போட்டிருந்தாலோ, சன்ஸ்கிரீன் பூசியிருந்தாலோ, அல்லது வேறு எண்ணெய்களை தடவியிருந்தாலோ முற்றிலும் நீக்கி விடுங்கள்.

ஏனென்றால் திரெட்டிங் அல்லது வேக்ஸிங் செய்யும்போது புருவத்தில் ஏற்படும் புதிய துளைகளுக்குள் சென்று வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது.

புருவத்தைத் திருத்திய பிறகு அந்தப் பகுதியின் மீது ஹெசல் அல்லது அக்னே ஆஸ்ட்ரின்ஜென்ட் கிரீமை தடவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். ஐப்ரோ திருத்துவதற்கு முன்பாக புருவப் பகுதியை மரத்துப்போகச் செய்யலாம்.

அதற்கென விற்கும் கிரீம்களை வாங்கித் தடவினால் புருவப் பகுதியில் உணர்வற்றுப் போகும். அப்படிப்பட்ட கிரீம்களை திரெட்டிங் செய்வதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பாக தடவிவிட வேண்டும்.

திரெட்டிங்கினால் ஏற்படும் வலி சிறிதுநேரத்துக்கு அசௌகரியமாக இருந்தாலும் சிலருக்கு சென்சிடிவ் ஸ்கின் இருப்பதால் அவர்களால் வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் போகலாம்.

திரெட்டிங் செய்த 5 நிமிடங்கள் அல்லது கால் மணிநேரத்துக்கு புருவப் பகுதிகள் சிவந்திருப்பது சகஜம்.

திரெட்டிங் செய்வதற்கு முன்பாக அந்த இடத்தில் ஐஸ் பாக் வைத்து தடவலாம். சீவாத பென்சில் போன்ற பொருளை வைத்து புருவப்பகுதியில் சிறிது நேரம் தட்டிக் கொண்டே இருந்தால் திரெட்டிங்கின் போது வலி குறைவாக இருக்கும். திரட்டிங் முடிந்தபின்பும் புருவம், கண்களின் கீழ்ப்பகுதி அல்லது வாய் மரத்துப் போன உணர்வு இருக்கலாம்.

அப்படி இருந்தால் வாயைத் திறந்தபடி உங்கள் நாக்கை எல்லாபக்கமும் சுழற்றுங்கள். இதன்மூலம் புருவம், மரத்துப் போன பகுதி நரம்புகளைத் தூண்டிவிடலாம். ஐந்து நிமிடங்கள் இப்படித் தொடர்ந்து நாக்கைச் சுழற்றியபடி இருந்தால் சீக்கிரமே மரத்துப்போன உணர்வு போய்விடும்.

வாய்ப்பகுதியில் அரிப்பு போன்ற உணர்வு இருந்தாலும் சரியாகிவிடும். ஐப்ரோ திரட்டிங் செய்வதற்கு முன்பாக முதலில் குளித்து விடுங்கள். ஏனென்றால் குளிக்கும்போது புருவத்தில் இருக்கும் முடிகள் நீரில் நனைந்து வேர்க்கால்களும் இலகுவாகத் திறந்து இருக்கும்.

அதன்பின் திரட்டிங் செய்தால் முடிகள் எளிதில் வந்து விடும். புருவங்களைத் திருத்திய பிறகு குளிர்ந்த ஜெல்லை பூசி அந்த இடத்தை ஈரப்பதமாக்குங்கள். இதற்கு நீங்கள் கற்றாழை ஜெல், ஆளி விதை ஜெல் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!