சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா?

கர்ப்பகாலத்தின் ஹார்மோன்கள், இன்சுலின் செயல்பாட்டை எதிர்த்து, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை, கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கிறார்கள்.

இது பொதுவாக கர்ப்பத்தின் 24 முதல் 28-வது வாரங்களுக்கு இடையில் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

*கார்போஹைட்ரேட் மிக அதிகமாக உள்ள உணவுகள், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து, கோதுமை, தினை, சோளம் போன்ற தானிய வகைகளை உட்கொள்ள வேண்டும்.

*நன்கு வேக வைத்த பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*பால், மீன், முட்டையின் வெள்ளை, போன்ற புரதங்கள் மற்றும் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவாக உள்ள கொய்யா, மாதுளம், சாத்துக்குடி, ஆரஞ்சு, அத்திப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம்.

*நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும் சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு போன்ற பாலூட்டிகளின் இறைச்சி), பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், சோடா, பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

*தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

*மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்றவற்றையும் செய்யலாம்.

*துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

நீரிழிவு நோய் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பனிக்குடநீர் அதிகமாக இருப்பதால் கருக்கலைப்பு ஏற்படும் அபாயம், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இல்லாதபோது அதிகரிக்கிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!