ஆவேச விராட் கோலி… சண்டை போட்ட கம்பீர்… அபராதம் விதித்த ஐபிஎல்!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூர் அணியை கடைசி பந்தில் லக்னோ அணி வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு பின் லக்னோ அணி வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினர்.

லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக மைதானத்திற்கு வந்து ஆர்சிபி ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து “keep Quiet” என்று செய்கை செய்தார். இது விராட் கோலியின் தன்மானத்தை சீண்டி பார்க்கும் வகையில் அமைந்தது.

இதனால் லக்னோ மைதானத்தில் களமிறங்கிய நொடி முதலே விராட் கோலி அதீத ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். நவீன் உல் ஹக் களத்தில் இருந்த போது, அவரை ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில் விராட் கோலி ஷூ-வை காட்டினார்.

அமித் மிஸ்ரா, விராட் கோலியை பார்த்து “எதற்காக இவ்வளவு ஆக்ரோஷம்.. தேவையில்லையே” என்பது போல் கேட்டார். அதனை ஏற்காத விராட் கோலி, நேரடியாக நடுவர் முன்னிலையில் அமித் மிஸ்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆட்டம் முடிவடைந்த பின் வீரர்கள் அனைவரும் கை குலுக்கி விடைபெற்றனர். அப்போது நவீன் உல் ஹக்கிடம் விராட் கோலி கை குலுக்கும் போது ஆக்ரோஷமாக நடந்துகொண்டார்.

இதற்கு நவீன் உல் ஹக் பதிலடி கொடுக்கும் வகையில் பேச, விராட் கோலி பதிலளித்தார். அங்கே மீண்டும் வாக்குவாதம் எழுந்த நிலையில், மேக்ஸ்வெல் நவீன் உல் ஹக்கை கட்டுப்படுத்தினார். அதேபோல் கவுதம் கம்பீருடனும் விராட் கோலி கை குலுக்கும் போது ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

லக்னோ பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் மற்றும் கோலி இடையே வார்த்தைகள் பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து கம்பீர் தனது அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸை கோலியுடன் பேச வேண்டாம் என்று தடுத்தார்.

பெங்களூரு அணியினர் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துள்ள டிரஸ்சிங் அறைக்குள் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், போட்டிக்குப் பிறகு கம்பீரைப் பற்றி கோலி வெளிப்படையாக பேசுவதைக் காணலாம்.

“உங்களால் கொடுக்க முடிந்தால், அதை வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் கொடுக்கவே வேண்டாம்” என்று அந்த வீடியோவில் விராட் கோலி கூறுகிறார்.

நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானது என்று கூறும் கோலி, லக்னோவில், லக்னோ அணியை விட எங்களுக்கு அதிக ஆதரவு கிடைத்தது என்பது உண்மையில் நம்ப முடியாத உணர்வு.

ஒரு அணியாக நாங்கள் எவ்வளவு விரும்பப்படுகிறோம், ரசிகர்கள் நம்மை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது,” என்று வீடியோவில கோலி கூறுகிறார்.

லக்னோவில் கோலிக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளெசிஸ் மகிழ்ச்சி அடைந்தார். “இது விராட்டின் சிறந்த பதிப்பு, அவர் சிறந்த நிலையில் இருக்கிறார்.

அதில் ஒரு பகுதியாக இருப்பது அருமை, நாங்கள் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன், மைதானத்தில் விஷயங்களை அமைதியாக வைத்திருப்பதே எனது வேலை,” என்று ஆட்டத்திற்குப் பிறகு டு பிளெசிஸ் கூறினார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!