மகேஸ்வரி பற்றி அசீம் இப்படி சொன்னாரா..?

பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பின் ரசிகர்களோடு லைவ்வில் உரையாடிய அசீம், மகேஸ்வரி பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.


விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் அசீம் வெற்றி பெற்றார். விக்ரமன் ரன்னரானார். இந்த சீசனின் ரிசல்ட் வெளியாகி ஒரு வாரம் கடந்திருந்தாலும், இதுக்குறித்த பேச்சுக்களே இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 வின்னர் அசீம், விஜே மகேஸ்வரி குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, நிவாஷினி, ஜிபி முத்து செரீனா, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, ரச்சிதா, எகேடி, அசீம், விக்ரமன், கதிரவன், மைனா நந்தினி, ஷிவின் மற்றும் அமுதவாணன் ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் விக்ரமன், ஷிவின், அசீம் மூவரும் இறுதிவரை முன்னேறினர். அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார். இவர் டைட்டில் வென்றது குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. இதுவரை நடந்து முடித்த சீசன்களில் டைட்டில் வின் பண்ணியவர்களை விட அதிகமாக அசீம் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதற்கு பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்துக்கொண்ட விதம் காரணமாக கூறப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அசீம் இரண்டு நாட்கள் கழித்துதான் முதல் வீடியோ வெளியிட்டார். மேலும், தன்னுடைய வெற்றி பணத்தில் பாதியை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளி படிப்பு செலவுக்கு உதவுவதாக கூறினார். இந்நிலையில் முதல் முறையாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமான பக்கத்தில் லைவில் ரசிகர்களோடு உரையாடினார் அசீம்.

அப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களை மிருகங்களோடு ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பாம்பு என்று கேட்கும் போது அது மகேஸ்வரி தான் என்று அசீம் கூறினார். பாம்பு எப்போதும் உஸ்…. உஸ் என்று சீறி கொண்டே இருக்கும். அதே போலத்தான் மகேஸ்வரியும் எப்போதும் சீறி கொண்டே இருப்பார். பாம்புக்கு நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று தெரியாது.

அது போல மகேஸ்வரிக்கும் தெரியாது. அது எதிரில் வருபவர்களை கொத்துவதற்கு பார்ப்பது போல தான் மகேஸ்வரியும் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. அசீம் டைட்டில் வென்றதை மகேஸ்வரி விமர்சித்திருந்தார். இதன் காரணமாகவே அசீம் இவ்வாறு கூறியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!