படுக்கையில் உலகக்கோப்பையை கட்டிப்பிடித்து தூங்கும் மெஸ்ஸி – வைரல் பதிவு

உலகக்கோப்பையை வென்ற மெஸ்ஸி அதனை கட்டிபிடித்து உறங்கும் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவிவருகிறது. இதன் மூலம் உலகக்கோப்பையை அவர் எவ்வளவு விரும்பினார் என்பது தெளிவாக தெரிகிறது.

தான் தூங்கும்போதும் கோப்பையை தன்னுடைய படுக்கையில் வைத்துக்கொண்டு இறுக்கமாக கட்டிபிடித்தபடி அவர் தூங்கும் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


கால்பந்து ஜாம்பவான் மரடோனாவிற்கு பிறகு அர்ஜென்டினா அணிக்கு தற்போதய ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது அசாத்திய திறமையால் கோப்பையை வென்றுகொடுத்துள்ளார்.

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக்கோப்பையை 36 ஆண்டுகள் கழித்து கைப்பற்றியது.

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவிற்கு பிறகு அர்ஜென்டினா அணிக்கு தற்போதைய ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது அசாத்திய திறமையால் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இதில் அவர் கோப்பையை முத்தமிடும் புகைப்படம் இந்த 2022 ஆம் ஆண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக மாறியுள்ளது. தற்போது அவர் அந்த கால்பந்து உலகக்கோப்பையை விடுவதாக இல்லை.

தான் தூங்கும்போதும் கோப்பையை தன்னுடைய படுக்கையில் வைத்துக்கொண்டு இறுக்கமாக கட்டிபிடித்தபடி அவர் தூங்கும் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அவரது சிறுவயது கனவு நிறைவேறியதை உணர்த்துவதாக உள்ளது.

இது தற்போது வைரலாக பரவிவருகிறது. அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றதும் தற்போது லியோனல் மெஸ்ஸி கோப்பையுடன் தாய் நாட்டிற்கு சென்றுள்ளார்.

கோப்பையை வென்றதன் கொண்டாட்டமாக அர்ஜென்டினாவில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அர்ஜென்டினாவிற்கு இந்த உலகக்கோப்பை வெற்றி ஒரு புத்துணர்ச்சி தரும் விஷயமாக அமைந்துள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!