ஒரே நாளில் தென்கொரியாவில் 84 ஆயிரம் பேருக்கு கொரோனா!

சீனாவை போலவே தென்கொரியாவும் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறது. அங்கு திடீர் திடீரென கொரோனா தொற்று எழுச்சி பெறுகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அங்கு 84 ஆயிரத்துக்கு 571 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 46 பேர் தொற்றுக்கு பலியாகினர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!