கால்பந்தாட்ட வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி மன்னர்!

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.

இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலித்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும் ,சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்..இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது., சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய அணியின் வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என சவுதி மன்னர் இன்ப அதிர்ச்சி அளித்து உள்ளார்.

கத்தாரில் இருந்து திரும்பி வந்தவுடன் வீரர்களுக்கு கார் வழங்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார். இந்திய மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கார் 10 கோடி ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!