இலங்கை தமிழ் பிரச்சனையா..? விக்ரமனுக்கு பதிலடி கொடுத்த ஜனனி!

பிக் பாஸ் 6 வீட்டில் செந்தமிழ் பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. இந்நிலையில் இலங்கை பிரச்சனையை இழுத்திருக்கிறார் விக்ரமன்.

பிக் பாஸ் 6 நீதிமன்றத்தில் செந்தமிழ் பிரச்சனை குறித்து வாதாடுகிறார்கள். இந்நிலையில் இலங்கை பிரச்சனை பற்றி பேசியிருக்கிறார் விக்ரமன்.

பிக் பாஸ் நீதிமன்றத்தில் இன்று தமிழ் வழக்கு வந்திருக்கிறது. இலங்கையில் இருந்து வந்திருக்கும் ஜனனி பேசும் தமிழ் தான் பிரச்சனையாம். ஜனனி சார்பில் அசீம் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடுகிறார். விக்ரமன் சார்பில் குவின்ஸி வாதாடுகிறார்.

அசீம் பேசிய பேச்சில் குவின்ஸிக்கு கோபம் எல்லாம் வந்துவிட்டது. அதை பார்த்த பார்வையாளர்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் ஜனனி மற்றும் விக்ரமன் நேரடியாக பேசிக் கொண்ட ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

இலங்கை

விக்ரமன் சீரியஸாக எடுக்காதீங்க கேம் என ஜனனி கூறினார். அதை கேட்ட விக்ரமனோ, அதை இப்படி மாத்தி இலங்கை அது இதுனு ரொம்ப டர்ட்டியாக்கப் பார்த்தீங்க என்றார். இல்லை இல்லை இல்லை நாங்க இலங்கையை எல்லாம் கொண்டு வர மாட்டோம் என்றார் ஜனனி. உறுதியாக சொல்கிறேன், நான் அதை மீன் பண்ண வில்லை என விக்ரமன் சொல்ல, எனக்கு தெரியாது, செந்தமிழ்னு நீங்க சொல்லவில்லையே என்றார் ஜனனி.

டாஸ்க்கில் வந்து எல்லோருக்குமே சிரமமாக இருந்தது. சிரமமா இருந்ததானு தான் நான் கேட்டேன். தமிழ் பேசுறது கொஞ்சம் சிரமமா இருந்துச்சாம்மானு தான் கேட்டேன். ஹானஸ்டா நான் சொல்லலமா என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்தார் விக்ரமன்.

தேவையில்லாத ஆணி

செந்தமிழ் பிரச்சனையை நீதிமன்றம் வரை கொண்டு வந்ததே தேவையில்லாத பிரச்சனை. இதில் கொஞ்சமும் தொடர்பில்லாத இலங்கையை எதற்காக இழுக்கிறார் விக்ரமன்.

இது தேவையே இல்லாத ஆணி. எதையாவது பேச வேண்டும், சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று பேச வேண்டாம் விக்ரமன். நீங்கள் ரொம்ப பயங்கரமானவர் என நிவாஷினி சொன்னது இப்போ தான் புரிகிறது என பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கமல்

ஜனனியை தூண்டிவிட்டு விக்ரமனை சிக்க வைத்ததே இந்த அசீம் தான். நினைத்ததை சாதித்துவிட்டார். வார இறுத நாளில் வரும் கமல் ஹாசன் இந்த தமிழ், இலங்கை பிரச்சனை பற்றி பேச வேண்டும்.

ஆனால் அவரே உடம்புக்கு முடியாமல் மருத்துவமனையில் இருக்கிறார். வீடு திரும்பினாலும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவாரா என்பது தெரியவில்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

மொக்கை

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளவாசிகள் தெரிவிக்கும் கருத்துகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனித்து வருகிறார்கள் போன்று. நீதிமன்ற டாஸ்க்கை பார்த்த பார்வையாளர்கள் இந்த செட்டப் மற்றும் டாஸ்க் ரொம்ப போர் என்றார்கள்.

இந்நிலையில் தான் நீதிமன்றத்தை காட்டாமல் ஜனனியையும், விக்ரமனையும் சும்மா பேச வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே நீதிபதியாக வெறும் காமெடி பீஸுகளாக இருக்கிறார்களே, அவர்களை மாற்றக் கூடாதா என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!