மோசமடைந்த உடல்நிலை… மீண்டும் மருத்துவமனையில் நடிகை சமந்தா..?

அரிய வகை நோயால் அவதிப்படும் சமந்தாவின் நிலைமை மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

மயோசிடிஸால் அவதிப்படும் சமந்தாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டார். தான் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்த நோயில் இருந்து மீண்டு வருவேன் என்று நம்பிக்கையுடன் கூறினார். சமந்தாவின் அறிவிப்பை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

மருத்துவமனை

சமந்தாவின் நிலை தற்போது மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. இதை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

குணமாகி வருகிறார் என்று சந்தோஷப்பட்ட நிலையில் இப்படி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாரே என ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். மேலும் சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

யசோதா

முன்னதாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சமந்தா ஓய்வு எடுக்கவில்லை. ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் தான் நடித்த யசோதா படத்திற்கு டப்பிங் பேச சென்றுவிட்டார். வாடகைத் தாயாக சமந்தா நடித்த யசோதா படம் தியேட்டர்களில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் சமந்தா என பலரும் பாராட்டியிருக்கிறார்கள். இந்தியா தவிர்த்து அமெரிக்காவிலும் யசோதாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை பார்த்த சமந்தா மகிழ்ச்சி அடைந்தார்.

நாக சைதன்யா

உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தாவுக்கு அவரின் முன்னாள் கணவரான நடிகர் நாக சைதன்யா போன் செய்து நலம் விசாரித்தாராம். இதையடுத்து சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை சம்பந்தப்பட்ட இருவரும் இதுவரை உறுதி செய்யவில்லை. சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர வேண்டும் என்பதே அவர்களின் ரசிகர்களின் ஆசையாகும்.

கெரியர்

கெரியரை பொறுத்தவரை நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடிக்க சமந்தா சம்மதம் தெரிவித்திருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். பர்சனல் வேறு கெரியர் வேறு என்பதை பிரித்துப் பார்க்கும் அளவுக்கு சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் மெச்சூரிட்டி இருக்கிறது. அதனால் தான் பிரிந்து வாழும்போதும் மீண்டும் சேர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ராசி

நாக சைதன்யாவுக்கு ராசியான ஹீரோயின் சமந்தா. மேலும் தனக்கும், சமந்தாவுக்குமான ரீல் கெமிஸ்ட்ரி அருமை என அவரை பிரிந்த பிறகும் கூட நாக சைன்யா தெரிவித்தார். விவாகரத்துக்கு பிறகும் கூட சமந்தாவை பற்றி நாக சைதன்யா நல்லவிதமாக பேசி வருவது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!