கண் புருவங்களில் நரைமுடி… வரக்காரணமும்… தீர்வும்!

புருவங்களில் உள்ள ரோமங்கள், கண் இமைகள், உடல் ரோமங்கள் ஆகியவை நரைப்பதை ‘போலியாசிஸ்’ (Poliosis) என்கிறோம். இந்தப் பகுதிகளில் உள்ள முடிகளில் மெலனின் எனப்படும் நிறமியே இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

கூந்தல் நுண்ணறைகள் பலவீனமாக இருப்பபது, நிறமி செல்களில் ஏற்படுகிற ஆட்டோஇம்யூன் குறைபாடு, மெலனின் உற்பத்தியில் ஏற்படுகிற பிறவிக் கோளாறு போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம்.

குடும்பப் பினனணி, வைட்டமின் பி 12 குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு, இதர ஊட்டச்சத்துகளின் குறைபாடு போன்றவையும் காரணமாகலாம். தீவிரமான பூஞ்சைத் தொற்றின் காரணமாக, சருமத்தின் ஒரு பகுதியில் உள்ள ரோமங்கள் நிரந்தரமாக வெள்ளையாக மாறலாம்.

மிகப்பெரிய காயம் ஏற்பட்ட பிறகும், அக்கி பாதிப்புக்குப் பிறகும், ரேடியோதெரபிக்கு பிறகும்கூட சருமத்தின் முடிகள் இப்படி வெள்ளையாக மாறலாம். சிலருக்கு அதீத மன அழுத்தம், கவலை மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதன் விளைவாகவும் இப்படி ஆகலாம்.

யூமெலனின் மற்றும் பியோமெலனின் ஆகிய நிறமிகள்தான் முடிக்கு கறுமை நிறத்தைக் கொடுப்பவை. இவற்றில் பியோமெலனின் என்பவை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைக் கொடுப்பவை.

யூமெலனின் என்பது பிரவுன் அல்லது கறுப்பு நிறத்தைக் கொடுப்பவை. இவை எல்லாம் இணைந்துதான் கூந்தலுக்கு அதன் இயல்பான நிறம் வருகிறது. மெலனோசைட்ஸ் என்பவைதான் மெலனின் உற்பத்தி செல்கள். இவைதான் மெலனின் நிறமித் தொகுப்புக்குக் காரணம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!