சானியா மிர்சா – சோயப் மாலிக் பிரிவுக்கு காரணம் பாகிஸ்தான் மாடல் அழகியா..?

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் ஆகியோர் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளார். இவர்களின் விவாகரத்திற்கு காரணம் ஒரு பாகிஸ்தான் மாடல் அழகி என்று கூறப்படுகிறது.


இவர்களின் விவாகரத்திற்கு முக்கிய காரணமாக சோயிப் மாலிக் வேறு ஒரு பாகிஸ்தான் மாடல் அழகியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் சரிவர பேச்சுவார்த்தை இல்லை என்றும் சானியா மிர்சா தனது மகனுடன் துபாயில் வசதித்துவந்ததாகவும் சோயிப் மாலிக் கிரிக்கெட் வர்ணனையாளராக பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

தற்போது இருவருக்கும் அதிகாரபூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் தனது மகனுடன் துபாயில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவாகரத்திற்கு முன்னாள் சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கடினமான நாட்கள்’ என்று பதிவிட்டிருந்தார். அவரின் பக்கத்தில் சோயிப் மாலிக் புகைப்படங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன.

என்ன காரணம்?
இவர்களின் விவாகரத்திற்கு முக்கிய காரணமாக சோயிப் மாலிக் வேறு ஒரு பாகிஸ்தான் மாடல் அழகியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஓரு விளம்பரத்தில் ஒன்றாக சேர்ந்த நடித்ததாகவும் அதுகுறித்து சோயிப் மாலிக்கிடம் கேள்வி எழுப்பியபோது நம்பிக்கையான பதில் எதுவும் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

அந்த மாடலின் பெயர் ஆயிஷா ஓமர். இவர்களின் உறவு குறித்து சானியா மிர்சா கண்டுபிடித்துவிட்டதாலும் இனி அவருடன் சேர்ந்த வாழ விருப்பமில்லை என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது.

ஆனால் இது முக்கிய காரணமா என்பதற்கு அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இல்லை. இந்த விவாகரத்து குறித்து இருவரும் தக்க நேரத்தில் பதிலளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் பிறந்த மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடி பதிவிட்டனர். அதுவே அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதுபோன்ற கடைசி பதிவு. இவர்களின் 12 ஆண்டுகள் திருமண உறவு தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

ஆயிஷாஒரு பாகிஸ்தான் நடிகை மற்றும் பிரபலமான யூடியூபர் ஆவார். அவர் நீண்ட காலமாக பொழுதுபோக்கு துறையில் நன்கு அறியப்பட்ட பிரபலமாக இருந்து வருகிறார். பாகிஸ்தானின் மிகவும் நாகரீகமான நடிகைகளில் இவரும் ஒருவர்.பாகிஸ்தானில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஆயிஷாவும் ஒருவர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!