புதிய வீட்டில் ஒன்றாக குடியேறும் தனுஷ் ஐஸ்வர்யா!

தனுஷ் தனது மனைவியுடன் புதிய வீட்டில் ஒன்றாக குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து பல பட ஹிட் படங்களை கொடுத்துள்ள தனுஷ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

பிரிந்த தம்பதி

தனுஷ் கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாகவும் இனி கணவன் மனைவி என்ற பந்தத்தில் வாழப் போவதில்லை என்றும் அறிவித்தனர்.

மீண்டும் இணைய முடிவு

இதையடுத்து இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்களும் அப்பா அம்மா என மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் வீட்டில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் இதில் விவாகரத்து முடிவை கைவிட தனுஷும் ஐஸ்வர்யாவும் சம்மதித்ததாகவும் தகவல் வெளியானது.

புதிய வீட்டில்

இந்நிலையில் புதிய தகவலாக தனுஷும் ஐஸ்வர்யாவும் அடுத்த ஆண்டில் தங்களின் புதிய வீட்டிற்கு ஒன்றாக குடிபெயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் புதிதாக சொகுசு பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ உள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

தனுஷ் ஐஸ்வர்யா குறித்த இந்த தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் நல்ல சேதி வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள். இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு ஐஸ்வர்யாவும் தனுஷும் போனில் பேசிக் கொண்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!