இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் செய்த காரியத்தை பார்த்தவர்களால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இசைமையப்பாளராக கோலிவுட்டுக்கு வந்த ஜி.வி. பிரகாஷ் குமார் ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோவாகிவிட்டார். தொடர்ந்து வித்தியாசமான கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதற்கிடையே சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு சிறப்பான பி.ஜி.எம். அமைத்ததற்காக தேசிய விருது பெற்றார்.
ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருப்பவர். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். மேலும் ரசிகர்களின் ட்வீட்டுகளை லைக் செய்வார்.
இந்நிலையில் தன்னுடைய ஸ்டைலான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
அதை பார்த்த ஹேம ப்ரியா என்பவர் கமெண்ட் பாக்ஸில் கூறியதாவது,
சார், என் பெயர் ஹேமப்ரியா. கும்பகோணத்தை சேர்ந்த நான் பி.சி.ஏ. படித்து வருகிறேன். இந்த மாதம் தேர்வு துவங்குகிறது. கட்டணம் செலுத்த வேண்டும். தயவு செய்து உதவி செய்யுங்கள் சார் என்று கேட்டார்.
ஹேமப்ரியா கேட்ட தொகையை உடனே ஜிபே மூலம் அனுப்பி வைத்துவிட்டார் ஜி.வி. பிரகாஷ். உங்களின் ஜிபே கணக்கிற்கு பணம் அனுப்பி விட்டேன் என்று தெரிவித்தார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் செய்த இந்த காரியத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டதும் இப்படி கொடுக்க நல்ல மனசு வேண்டும். அது உங்களிடம் இருக்கு சார் என்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!