பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும்- ரஷியாவிற்கு, அமெரிக்கா எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளால் ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது எனவு அந்நாட்டு அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துப் போவதாக தெரிவித்துள்ள ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக பதிலளிக்கும் என்றார். நான் தெளிவாகச் சொல்கிறேன், ரஷ்யா இந்த எல்லையைத் தாண்டினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்த நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு நிறைவு பெற்றதும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தெரிவித்த சல்லிவன், உக்ரைனில் நடைபெறும் வாக்கெடுப்பு வலிமை அல்லது நம்பிக்கையின் அடையாளங்கள் அல்ல என்றார்.

இது ரஷிய ராணுவத்திற்கான திரும்ப அழைப்பு என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து அவர்கள் ஓட முயற்சிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது எனவும் அவர் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவும் புதினும் எப்படி மோசமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் அவை என்றும் சல்லிவன் தெரிவித்தார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!