குடிபோதையில் மாணவர்கள் முன் நடனமாடிய பேராசிரியர்!

வகுப்பறையில் குடிபோதையில் மாணவர்கள் முன் நடனமாடிய பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள குருநானக் தேவ் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்.

ரவீந்தர் குமார் என்ற பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறைக்கு வந்து மாணவர்கள் அருகே பாட்டிலில் இருந்து மது அருந்திக்கொண்டே நடனமாடியுள்ளார். அவர் ஒரு பஞ்சாபி திரைப்படப் பாடலுக்கு நடனமாடினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பேராசிரியர் தனது சொந்தப் பணத்தில் மது அருந்துவதாகவும், தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் கூறுகிறார், இவர் கணித பேராசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகிறது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து, அவரை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உள்ளது. ஆனால் பேராசிரியர் தான் குடிபோதையில் எதையும் செய்யவில்லை என்றும் வேடிக்கைக்காக செய்தேன் என்றும் கூறியுள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!