2 மகன்களை தவிக்கவிட்டு 22 வயது வாலிபருடன் 40 வயது பெண் ஓட்டம்!

சமூக ஊடகங்களில் அபரிமிதமான வளர்ச்சி சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாகவே அமைந்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஒருபுறம் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், மற்றொருபுறம் பண்பாடு, கலாச்சாரத்தை மறந்து ஆடம்பரத்தை விரும்பி உண்மைத்தன்மையை அறியாமல் வாழ்வை தொலைக்கும் இளம்பெண்கள் என நாளும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், திருமணம் செய்து கொடுக்க வயதில் உள்ள மகன்களை வைத்துக்கொண்டு, தனக்கு மற்றொரு புது வாழ்வை தேடிச்சென்ற தாயின் செயல் அந்த குடும்பத்திற்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவரப்பட்டு கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி லலிதா (வயது 40). இந்த தம்பதிக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

உள்ளூரில் பார்த்து வந்த வேலையால் வருங்காலத்தில் குடும்பம் நடத்த முடியாது என்று எண்ணிய அய்யப்பன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். அங்கு மகன்களின் படிப்பு உள்ளிட்ட எதிர்காலத்திற்காக தன்னை வருத்தி பணம் சம்பாதித்து வீட்டிற்கு அனுப்பினார்.

மகன்களின் படிப்பிற்காக லலிதா கவரப்பட்டு கிராமத்தில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்து அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். மூத்த மகன் என்ஜினீயரிங் முடித்துவிட்டு கடந்த சில மாதங்களாக அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வருகிறார்.

இளைய மகன் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார். கணவர் வெளிநாட்டில், மகன்கள் வேலை, படிப்பு என்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த லலிதா பேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

நட்பு பலருடன் இருந்தாலும், நெருங்கிய பழக்கம் என்பது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வாலிபருடன் ஏற்பட்டது. தன்னை அழகாய் காண்பிப்பதற்காக விதவிதமாக ஈர்க்கும் ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட லலிதா, தான் திருமணமாகி, திருமண வயதில் 2 பிள்ளைகளாக கொண்டுள்ளார் என்பதையே மறந்து விட்டார்.

பிரி கேர், கவர்ச்சியான படங்களுக்கு தன்னை சொந்தக்காரராக்கிய லலிதா அதனை ரகசிய காதலனான கடலூர் வாலிபருக்கு அனுப்பி வந்தார். இதனை பார்த்து மெய் மறந்த அந்த வாலிபர் எத்தனை நாட்களுக்குத்தான் நாம் புகைப்படம் மூலமாக பேசிக்கொள்வது, நேரில் சந்திப்போம் என்று முடிவெடுத்து உள்ளனர். இதற்கு எந்தவித தயக்கமும் இன்றி பச்சைக் கொடி காட்டிய லலிதா அவரை கண்களால் பேசி மயக்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து கடலூரில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்த வாலிபர் அங்கு தெரிந்த நபர் மூலம் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு ஓட்டி பிழைப்பும் நடத்தினார்.

ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற சமயங்களில் லலிதாவுடன் கலந்தார். தன்னை கண்டிக்க ஆளின்றி ஆட்டம்போட்ட லலிதா, தொழிலுக்கு கொடுத்த ஆட்டோவில் தொலைதூரம் சென்று தனிமையில் இருந்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

அதன்பலன் தற்போது லலிதா 4 மாத கர்ப்பிணியானார். கள்ளக்காதலை மறைத்தாலும், கருவில் வளரும் குழந்தையை மறைக்க முடியாது என்று எண்ணிய லலிதா, அவருடன் குடும்பம் நடத்தவும் முடிவு செய்தார்.

மகன்களுக்கு விபரம் தெரியும் முன்பு வீட்டைவிட்டு வெளியேற பல நாட்கள் திட்டம் வகுத்த அவர் கடந்த 13-ந்தேதி வாயை கட்டி, வயிற்றை கட்டி கணவர் அனுப்பி வைத்த பணம் மூலம் வாங்கி வைத்திருந்த 20 பவுன் நகைகளை அள்ளிக் கொண்டு அர்த்த ராத்திரியில் கள்ளக்காதலனுடன் மாயமானார்.

விடிந்ததும் இதனை அறிந்த மகன்கள் சிங்கப்பூரில் உள்ள தந்தைக்கு கனத்த இதயத்துடன் தகவலை கூறினர். மேலும் தாயாக இருந்தாலும் இப்படி ஒரு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டு சென்ற அவரை கண்டித்தே ஆகவேண்டும் என்ற வகையில், ஒரத்தநாடு போலீசில் புகாரும் கொடுத்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகிறார்கள். இதற்கிடையே கணவர், மகன்களை மறந்து உல்லாச வாழ்க்கையை தேடிச்சென்ற லலிதா, தனது கணவருக்கு தான் கடலூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கள்ளக்காதலனான 22 வயது வாலிபருடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படங்களையும், அதனுடன் சேர்த்து ஒரு ஆடியோ பதிவையும் அனுப்பியுள்ளார். அந்த பதிவில், தான் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

அவருடன் குடும்பம் நடத்தப் போகிறேன், நான் தற்போது 4 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தன்னுடன் மாலையும் கழுத்துமாக இருக்க வேண்டிய மனைவி, மாற்றானுடன் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தையும், ஆடியோ பதிவையும் கேட்டு ஆடிப்போன அய்யப்பன் மனதை திடமாக்கிக் கொண்டார்.

தனது மகன்களை தொடர்பு கொண்டு இனிமேலும் அப்படியொரு அம்மா நமக்கு வேண்டாம். அவர் திரும்பி வந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று ஆறுதல் கூறியுள்ளார். இனி எப்படி வேலைக்கு செல்வேன் என்று மூத்த மகனும், எப்படி கல்லூரிக்கு செல்வேன் என்று இளையமகனும் கண்ணீருடன் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!