பாடி மசாஜ் செய்வதால் உடலுக்கு தரும் நன்மைகள்..!

பலருக்கும் பாடி மசாஜ் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், இதற்காக மசாஜ் சென்டர் செல்ல தயங்கிவருகின்றனர். அதற்குக் காரணம், பாடி மசாஜ் அல்லது ஸ்பாவால் ஏற்படும் நன்மைகளையும், அதன் செயல்முறைகளையும் அறியாததுதான். பாடி மசாஜ் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பலனளிக்கிறது.

பாடி ஸ்பா சிறந்த மருத்துவ முறையாகும். வாசனை எண்ணெய்கள் அல்லது கிரீம்களுடன் மசாஜ் செய்கையில், ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுவது மட்டுமின்றி தோல் செல்களில் அதிக ஊட்டச்சத்துகளைப் பெற உபயோகமாக அமைகிறது. பாடி ஸ்பா தசை இறுக்கம், சோர்வைப் போக்க உதவுகிறது.

அதன் காரணமாகத்தான், பெரும்பாலானோர் பாடி ஸ்பாவில் சொக்கி தன்னை மறந்து தூங்குகின்றனர். இதனால் சருமத்தில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கிறது.தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மன அழுத்தம், கவலையைக் குறைக்கிறது. உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

உடல் சோர்வாகவும், மிகுந்த வலியுடனும் இருந்தால், அதனைப் போக்குவதற்கு அனைவரும் மேற்கொள்ளும் ஒரு முறை தான் மசாஜ். வாரத்திற்கு ஒரு முறை உடலுக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், உடல் வலி குறைவதோடு, உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமின்றி, உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் ரிலாக்ஸாக இருக்கும்.

அதிலும் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி ஆயில் மசாஜ் செய்து கொண்டால், இன்னும் சூப்பராக இருக்கும். இவ்வாறு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்ய பல எண்ணெய்கள் உள்ளன.

பெரும்பாலும் அனைவரும் உபயோகிப்பது நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டும் தான். ஆனால் இவை மட்டுமின்றி, இன்னும் நிறைய எண்ணெய்கள் உடலுக்கு மசாஜ் செய்ய பயன்படுகின்றன. இந்த எண்ணெய்கள் அனைத்தும் உடல் வலியைப் போக்குவதோடு, சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக ஸ்ட்ரெட்ச் மார்க், சரும வறட்சி, கடினமான சருமம் போன்ற பிரச்சனைகளை, உடலுக்கு மசாஜ் செய்வதன் மூலம் தடுக்கலாம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!