தந்தை வயது நடிகரை காதலித்து மணந்து… கர்ப்பமாகி.. மனம் திறந்த பிரபல நடிகை!

தந்தை வயது நடிகரை காதலித்து திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றது ஏன் என மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அஞ்சு.

தந்தை வயது நடிகரை காதலித்து திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றது ஏன் என மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அஞ்சு.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி அஞ்சு. குழந்தையாக பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் குமரி ஆன பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்தார் அஞ்சு. கேளடி கண்மணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அஞ்சு, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

காதல் திருமணம்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் அஞ்சு. சின்னத்திரையிலும் தடம் பதித்துள்ள அஞ்சு ஏராளமான சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார். நடிகை அஞ்சு 1995ஆம் ஆண்டு டைகர் பிரபாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

அப்பா வயது நடிகர்

டைகர் பிரபாகரை காதலித்த போது அஞ்சுவுக்கு வயது 17 தான். ஆனால் டைகர் பிரபாகருக்கு வயது 48. அவரது அப்பா வயதில் இருந்த டைகர் பிரபாகரை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சு. அவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. 1996ஆம் ஆண்டே டைகர் பிரபாகரை விவாகரத்து செய்தார் அஞ்சு.

வேறு பெண்ணுடன் தொடர்பு

தான் கர்ப்பமாக இருந்தபோது கணவரை பிரிந்தார் அஞ்சு. தற்போது அவரது மகனுக்கு 25 வயதாகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அஞ்சு தனது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது ஏன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் அப்பா வயதில் இருந்தவரை காதலித்தேன். குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி அவரை திருமணம் செய்து கொண்டேன்.

நான்காவது திருமணம்

திருமணத்திற்கு பிறகுதான் அவருக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் ஆனது தெரிந்தது. அவர்களுக்கு என்னைவிடவும் பெரிய பிள்ளைகள் இருந்தனர். நான் கர்ப்பமாக இருந்த போது டைகர் பிரபாகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டேன் என கூறியுள்ளார்.

52 வயதில் மரணம்

நடிகர் டைகர் பிரபாகர் ஏற்கனவே அல்போன்சா மேரி, நடிகை ஜெயமாலா உள்ளிட்ட மூன்று பேரை திருமணம் செய்திருந்தார். நான்காவதாக அஞ்சுவை திருமணம் செய்த டைகர் பிரபாகர், அதன்பிறகும் பெண்களுடன் தொடர்பில் இருந்தார். அன்புக்கு நான் அடிமை, அண்ணாமலை, பாண்டியன், முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டைகர் பிரபாகர், 2001ஆம் ஆண்டு தனது 52 வயதில் மரணமடைந்தார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!