‘தி லெஜெண்ட்’ பட நாயகிக்கு இவ்வளவு சம்பளமா?

தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக நயன்தாரா இருந்து வருகிறார். தெலுங்கு, மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏற்கனவே ரூ.6 கோடி வரை வாங்கிய அவர் இப்போது ரூ.10 கோடி கேட்பதாக கூறப்படுகிறது. தென் இந்திய நடிகைகள் யாரும் நயன்தாரா சம்பளத்தை நெருங்கவில்லை.

இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தாலா சமீபத்தில் திரைக்கு வந்த ‘தி லெஜண்ட்’ என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தியது. முன்னணி நடிகையான நயன்தாராவே இவ்வளவு சம்பளம் பெறாத நிலையில் ஊர்வசி ரவுத்தாலாவுக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது உண்மையா? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இதனை ஊர்வசி ரவுத்தாலா தரப்பில் மறுத்துள்ளனர். ரூ.20 கோடி ஊர்வசி ரவுத்தாலா வாங்கவில்லை என்றும், ஒரு அறிமுக நடிகைக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ அதை விட அதிகமாக பெற்று இருக்கிறார் என்றும் ஊர்வசி ரவுத்தாலா தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!