இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் கடந்த 2011- ஆம் ஆண்டு “சட்டப்படி குற்றம்” என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்தை விளம்பரம் செய்வதற்காக சரவணன் என்பவரிடம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் இதையடுத்து இந்த படத்தின் விளம்பர செலவு ரூ. 76 ஆயிரத்தைத் திருப்பி தராததால் விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ. சந்திர சேகரிடம் பணத்தை செலுத்த உத்தரவிட்டது.
ஆனால் அவர் பணத்தை செலுத்தாததால் சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில் உள்ள ஏ.சி, டேபிள், உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் ஜப்தி செய்ய சென்ற ஊழியர்களை அனுமதிக்காததால் காவல்துறையின் உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 76 ஆயிரம் பணத்திற்காக எஸ்.ஏ. சந்திர சேகரின் வீடு ஜப்தி செய்யப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!