செருப்பால் அடித்த 3வது மனைவி மீது பிரபல நடிகர் பகீர் புகார்!

பிரபல நடிகரான நரேஷ் பாபு தனது மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி மீது பகீர் குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவின் மகன் நரேஷ் பாபு. இவர் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் ஆவார். ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்தான நரேஷ் பாபு, மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நரேஷ் பாபுவும் ரம்யாவும் பிரிந்துள்ளனர்.

45 வயது நடிகை

இந்நிலையில் நரேஷ் பாபு 45 வயதான நடிகை பவித்ராவுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தங்கியிருப்பதை அறிந்த அவரது மனைவி ஹோட்டலுக்கு நேரடியாக சென்று இருவரையும் செருப்பால் அடிக்க முயன்றார்.

நரேஷ் பாபு குற்றச்சாட்டு

ரம்யாவை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் நரேஷ் பாபு தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது மூன்றாவது மனைவி குறித்து பகீர் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.

சித்ரவதை செய்கிறார்

அதாவது, ரம்யா தன்னை மிகவும் சித்ரவதை செய்து வருவதாகவும், பணம் கேட்டு பிளாக் மெயில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் ரம்யாவுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறியுள்ள நரேஷ் பாபு, மீண்டும் மீண்டும் பணம் கேட்டு ரம்யா தன்னை தொல்லை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தவறாக கூறியதில்லை

மேலும் தான் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதாகவும் அதில் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் தான் நடித்துள்ளதாகவும் கூறியுள்ள நரேஷ் பாபு, இதுவரை தன்மீது யாருமே தவறான புகார்களை கூறியதில்லை என தெரிவித்துள்ளார். நரேஷ் பாபுவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!