அப்பாவிடம் பேசியே 3 மாதங்கள் ஆகிவிட்டது – நைனிகாவின் பரிதாப நிலை!

நடிகை மீனாவின் மகளான நைனிகா தனது அப்பாவிடம் பேசியே 3 மாதங்கள் ஆனதாக கதறியுள்ளார்.


நடிகை மீனாவின் மகளான நைனிகா தனது அப்பாவிடம் பேசியே 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாக கதறி வருகிறாராம் நைனிகா.
குழந்தை நட்சத்திரம்

நடிகை மீனா 2009ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

நுரையீரல் தொற்று

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 6 மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

உறுப்புகள் செயலிழந்து

ஆனால் மாற்று நுரையீரல் கிடைப்பதில் தாமதமானது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுயநினைவை இழந்தார் வித்யாசாகர். இதனை தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்ப்பட்டு வந்தன. இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து கடைசியில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது உயிர் பிரிந்தது.

உருக்கமான தகவல்

இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வித்யா சாகர் மீனா தம்பதியின் மகள் நைனிகா குறித்த உருக்கமான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுயநினைவுடன் இருந்தபோது

அதாவது, நைனிகா தனது அப்பாவிடம் பேசி 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம். வித்யா சாகர் மருத்துவமனையில் சுய நினைவுடன் இருந்தபோது தனது மகளுடன் பேசியுள்ளார். திடீரென அவர் சுயநினைவை இழந்ததால் பேச முடியாமல் போனது. 95 நாட்கள் நினைவு திரும்பாமலேயே இறந்துவிட்டார் வித்யா சாகர்.

மகள்தான் உயிர்

வித்யா சாகருக்கு மகள் என்றால் உயிராம். அவ்வளவு பாசத்துடன் மகளை வளர்த்து வந்துள்ளார். அதேபோல் நைனிகாவுக்கும் அப்பா என்றால் அவ்வளவு ஆசையாம். அப்பாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றதுமே உடைந்து போய்விட்டாராம் நைனிகா. எப்படியும் மீண்டு வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர் குடும்பத்தினர்.

யாருக்கும் வரக்கூடாது

இதனால் அன்பான அப்பாவிடம் பேசவே முடியாமல் கொடுமையின் உச்சத்தை இந்த வயதிலேயே அனுபவித்துள்ளார் நைனிகா. மீனா குடும்பத்தினரும் பிரபலங்களும் மீனாவை விடவும் நைனிகாவை நினைத்து பெரும் கவலை கொண்டுள்ளனர். நைனிகாவுக்கும் மீனாவுக்கும் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது கவலை தெரிவித்து வருகின்றனர்.

அப்பாவிடம் பேசவே இல்லை

அப்போதுதான் நினைவை இழந்துள்ளார் வித்யா சாகர். இதனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தனது அப்பாவிடம் பேச முடியாமல் தவித்து வந்தார் நைனிகா. இன்று நினைவு திரும்பிவிடாதா, நாளை திரும்பிவிடாதா? பழையப்படி பேசிவிட மாட்டோமோ என எதிர்பார்த்மு காத்திருந்தனர். ஆனால் நினைவு திரும்பாமலேயே இயற்கை எய்திவிட்டார் வித்யாசாகர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!