கை, கால்களை கட்டி பெண்ணை பால்கனியில் இருந்து வீசி கொன்ற கும்பல்!

ஆக்ராவில் பிரபல பெண் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப், இன்ஸ்ட்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வந்தவர் ரித்திகா சிங் (30). இவர் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் வசித்து வந்தார்.

ரித்திகா சிங்கிற்கு சில ஆண்டுகள் முன்பு ஆகாஷ் கவுதம் என்பவருடன் திருமணம் நடந்து பின்னர் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், ரித்திகா சிங் விபுல் அகர்வால் என்ற இளைஞருடன் மேற்கண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிவிங் டு கெதரில்’ வாழ்ந்து வந்தார்.


இந்த சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆகாஷ் கவுதம், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் ரித்திகாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையின்போது விபுல் அகர்வாலை பாத்ரூமில் அடைத்து பூட்டியுள்ளனர்.

பின்னர் ரித்திகாவின் கை, கால்களை கட்டி பால்கனியில் இருந்து தூக்கி வீசியுள்ளனர். நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்த ரித்திகா சிங் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, விபுல் அகர்வாலின் அலறல் சட்டகம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது ரித்திகா சிங் ரத்த வெள்ளத்தில் கீழே இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் தாஜ்கான்ச் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் கொலை வழக்கை பதிவு செய்து ரித்திகா சிங்கின் முன்னாள் கணவர் ஆகாஷ் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த பெண்ணை கை, கால்களை கட்டி மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!