நடிகையின் முகம் விகாரமானதன் பகீர் காரணம்!

பல் சிகிச்சை பெற்ற கன்னட நடிகை சுவாதி முகம் விகாரமானதற்கான பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி. நகரை சேர்ந்தவர் நடிகை சுவாதி. சில கன்னட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக பல் வலியால் அவதிப்பட்டு வந்த நடிகை சுவாதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அலங்கோலமான முகம்

சிகிச்சைக்கு பிறகு சுவாதியின் முகம் அலங்கோலமாக மாறியது. பல் சிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்திய பிறகுதான் சுவாதியின் முகம் வீங்கி விகாரமாக மாறியுள்ளது. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் முகம் வீங்கிப்போனதாக உணர்ந்த சுவாதி மருத்துவமனை மீது குற்றம்சாட்டி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார்.

சிகிச்சை தகவல்

சுவாதியின் சிகிச்சைக்கு முன்பான மற்றும் சிகிச்சைக்கு பிறகான போட்டோக்கள் வெளியானது. தனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவனை மீது வழக்கு தொடரப்போவதக தெரிவித்துள்ளார் சுவாதி. இந்நிலையில் சுவாதிக்கு அளித்த சிகிச்சை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிட்

அதாவது சுவாதிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சுவாதிக்கு மயக்க மருந்துக்கு பதிலாக முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிட் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த ஆசிட் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும், எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் சுவாதியின் முகம் கோரமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!