வீட்டில் பீட்ரூட்டை வளர்க்கும் முறை!

பீட்ரூட்டை வளர்ப்பது ஒரு நீண்ட செயல்முறை என்றாலும், இந்த முறையைப் பயன்படுத்தி வீட்டில் இயற்கை விவசாய முறையில் காய்கறிகளை வளர்த்து சாப்பிடலாம்.

ஆரோக்கியமாக வாழலாம். பீட்ரூட், குறைந்த கலோரி கொண்ட காய்கறி. அதன் சாறு ரத்த ஓட்டம், ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும்.

பெண்களுக்கு இது அவசியமானது. பீட்ரூட் வளர்க்கும் முறை * பீட்ரூட்டின் மேல் பகுதியில் இருக்கும் உலர்ந்த இலைகளை அகற்றி விடவும். * பின்பு பீட்ரூட்டின் நுனி பகுதிக்கு சற்று கீழே வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும். பின்பு வெட்டிய பகுதியை கண்ணாடி கிண்ணத்தில் வைத்து சிறிதளவு நீர் நிரப்பவும்.

  • பீட்ரூட் மேல் பகுதி நீரில் மூழ்க கூடாது. ஏனெனில் அப்படி நீர் சூழ்ந்தால் அது அழுக ஆரம்பித்துவிடும்.

  • பின்பு அந்த கண்ணாடி கிண்ணத்தை நேரடியாக சூரிய ஒளி படாத இடத்தில் வைக்கவும். சமையல் அறையில் வைத்துக்கொள்ளலாம்.

  • மூன்று, நான்கு நாட்களுக்குள் பீட்ரூட்டின் நுனி பகுதியில் புதிய இலைகள் துளிர்விட ஆரம்பித்துவிடும்.

  • ஒரு நாள் இடைவெளிவிட்டு மறுநாள் கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரை மாற்ற வேண்டும். 15-வது நாளில் இலைகள் நன்றாக வளர்ச்சி அடைந்துவிடும். அதன் பின்பு இயற்கை உரம் கலந்த மண் தொட்டிக்கு பீட்ரூட் செடியை மாற்றிவிடலாம். அந்த மண் தொட்டியை ஓரளவு நிழல் உள்ள பகுதியில் வைக்கவும்.

  • மண் தொட்டியிலும் ஒரு நாள் இடைவெளி விட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்கவும். மூன்று, நான்கு மாதங்களில் பூக்கள் பூக்க தொடங்கிவிடும். அதன் பிறகு பீட்ரூட்டை அறுவடை செய்து சமைக்கலாம்.

  • குறிப்பு: பீட்ரூட்டை நிழல் உள்ள பகுதியில் வளர்க்க வேண்டும். ஓரளவு வளர்ச்சி அடைந்த பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு சில வாரங்கள் இடைவெளிவிட்டு இயற்கை உரம் தூவ வேண்டும். அது செடியின் வளர்ச்சியை தூண்டும். 100 நாட்களுக்குள் பீட்ரூட் அறுவடைக்கு தயாராகிவிடும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!