நயன் கல்யாணத்துக்கு அந்த ஆளு எதுக்கு வந்தார்..? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

நயன்தாராவின் திருமணத்திற்கு வந்த திரையுலக பிரபலம் ஒருவரின் புகைப்படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

நயன்தாரா தன் நீண்ட கால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை இன்று திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட்டில் அமைக்கப்பட்ட கண்ணாடி மண்டபத்தில் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.

அந்த திருமண நிகழ்ச்சிக்கு திரையுலகை சேர்ந்த சிலருக்கு தான் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம், கார்த்தி, ராதிகா, சரத்குமார், இயக்குநர் விஜய், அட்லி, வசந்த் ரவி, போனி கபூர், டிடி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

மேலும் மலையாள நடிகரான திலீப்பும் நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மலையாள படங்களிலும் நடித்து வரும் நயன்தாரா அவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தது தற்போது தெரிய வந்துள்ளது.

திலீப்பை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள். பிரபல நடிகையின் பாலியல் தொல்லை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றார் திலீப். ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவருக்கு தற்போதும் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு பெண்ணின் மானத்தோடு விளையாடிய நபர் எதற்காக நயன்தாராவின் கல்யாணத்துக்கு வரணும். தலைவி ஏன் அவரை போய் அழைத்தார் என்று ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!