புளியமரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர் – காரணம் என்ன?

கீழ்பென்னாத்தூர் அருகே சாலையோர புளிய மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரிலிருந்து அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு புளியமரத்தில் ஒருவர் தூக்கிட்டு தொங்குவதாக கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்திற்கு நேற்றிரவு 7.30 மணி அளவில் தகவல் வந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கீழ்பென்னாத்தூர் நடுத்தெரு பகுதியில் வசித்து வருபவர் காண்டீபன் (வயது 32) கூலி தொழிலாளி. இவர் தனது மாமனார் வீட்டிற்கு தனது மனைவி ஜெயந்தி (28) மற்றும் குழந்தைகளுடன் சென்று இருந்தார்.நேற்று அங்கு அவர்களுக்குள் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

மனம் உடைந்த காண்டீபன் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் தனது நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவலூர்பேட்டை சாலை வழியாக வந்த வாகன ஓட்டிகள் புளிய மரத்தில் யாரோ தூக்கில் தொங்குவதாக காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் விரைந்து சென்று பார்த்தபோது அது காண்டீபன் என தெரிய வந்தது. காண்டீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!