நடிகை சித்ராவின் நகைகள் மாயம்… பகீர் கிளப்பும் அம்மா!

விஜே சித்ராவின் நகைகள் பல மாயமாகியிருப்பதாக அவரது அம்மா திடுக் தகவலை கூறியுள்ளார்.


விஜே சித்ராவின் நகைகள் மாயமாகியிருப்பதாக அவரது அம்மா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜே சித்ராவின் மரண வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. விஜே சித்ரா மரணம் மற்றும் அவரது கணவர் ஹேமந்த் தொடர்பாக நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைகள் மாயம்

இந்நிலையில் விஜே சித்ராவின் அம்மா, ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவருடைய நகைகள் காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். விஜே சித்ராவின் விஜே சித்ராவின் 31 சவரன் நகைகள் மாயமானதாக கூறிய அவரது அம்மா, அந்த நகை இருந்த பெட்டிகள் ஹேமந்தின் அறையில் இருந்ததை உறுதி செய்துள்ளார்.

இரண்டு நெக்லஸ்

நிச்சயார்த்தத்திற்காக எடுத்த நகைகளை வீட்டில் வைத்திருந்ததாக கூறிய அவர், தான் வைத்திருந்த அந்த பாக்ஸோடு சித்ரா எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். 21 சவரனில் ஒரு நெக்லஸும் 10 சவரனில் ஒரு நெக்லஸும் என மொத்தம் 31 சவரனில் இருந்த இரண்டு நெக்லஸ்கள் மட்டும் காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளார்.

ஹேமந்த் ரூம்மில்

இததொடர்பாக போலீஸில் புகார் அளிக்கலாமா என யோசித்திருந்த நிலையில் அந்த நகை பெட்டிகள் ஹேமந்தின் ரூம்மில் இருந்ததை அவரது நண்பர் இமானுவேல் கடவுள் போல் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்த நகைகளை சித்ரா ஹேமந்துடன் சென்றபோது எடுத்து சென்றதாகவும் அந்த நகை பெட்டிதான் ஹேமந்தில் ரூம்மில் இருந்தது என்றும் போட்டோக்களுடன் தெரிவித்துள்ளார் சித்ராவின் அம்மா.-News & image Credit: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!