இலங்கையில் பதற்ற நிலை- வெளிநாட்டிற்கு தப்பிச்செல்கிறாரா ராஜபக்சே?

தொடர் போராட்டங்களின் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதை தொடர்ந்து இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகிந்த ராஜபக்‌ஷே பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியது. பலத்த ராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிப்பது குறித்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!