காதல் திருமணம் செய்த வாலிபருக்கு நடந்த பயங்கரம் – பெண்ணின் சகோதரர் பகீர்!

மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் வாலிபரை கவுரவ கொலை செய்ததாக கைதான பெண்ணின் சகோதரர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், பில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது30). இவர் ஐதராபாத்தில் உள்ள கார் கம்பெனியில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். கனா போர் பகுதியை சேர்ந்தவர் செய்யது அஸ்ரி சுல்தான்.

நாகராஜும், செய்யது அஸ்ரி சுல்தானும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்களது காதல் விவகாரம் செய்யது அஸ்ரி சுல்தான் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் இளம்பெண்ணின் பெற்றோர் நாகராஜுடன் தொடர்பு கொள்ள வேண்டாமென எச்சரிக்கை விடுத்தனர்.

இருப்பினும் செய்யது அஸ்ரி சுல்தான் நாகராஜுடன் செல்போனில் பேசி வந்தார். இதனால் அவரது பெற்றோர் செய்யது அஸ்ரி சுல்தானை வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு அறையில் பூட்டி வைத்தனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து தப்பிய அஸ்ரி சுல்தான் ஐதராபாத்தில் நாகராஜ் தங்கியிருக்கும் அறைக்கு சென்றார். இதையடுத்து இருவரும் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி லாலா ஆரிய சமாஜ் கோவிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். வீட்டில் இருந்த மகள் காணாததால் அதிர்ச்சி அடைந்த அஸ்ரி சுல்தான் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவரை தேடி ஐதராபாத்திற்கு வந்தனர்.

அஸ்ரி சுல்தானை அவரது சகோதரர்கள் தேடுவதை அறிந்த நாகராஜ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விசாகப்பட்டணத்திற்கு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார்.

கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அஸ்ரி சுல்தான் பெற்றோர் அமைதியாக இருந்ததால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மீண்டும் ஐதராபாத்திற்கு வந்தார்.

சரூர் நகர், பஞ்சாப் அணில்குமார் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகராஜ் வேலைக்கு சென்றுவிட்டு கார்ப்பரேஷன் ரோடு வழியாக வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நாகராஜை பின்தொடர்ந்து வந்த அஸ்ரி சுல்தான் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் பைக்கில் சென்ற நாகராஜ் மீது கடப்பாரையால் தாக்கினர். இதில் தலையில் படுகாயம் அடைந்த நாகராஜ் பைக்கிலிருந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து நாகராஜை கடப்பாறையால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆட்கள் நடமாட்டம் நிறைந்த சாலையில் வாலிபர் ஒருவரை கடப்பாறையால் சரமாரியாக குத்தி கொலை செய்வதைக் கண்ட அப்பகுதியில் இருந்த பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஐதராபாத் போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஸ்ரி சுல்தான் சகோதரரை கைது செய்தனர். அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கைதான வாலிபர் போலீசாரிடம் கூறுகையில்:

எங்கள் எதிர்ப்பையும் மீறி மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் நாகராஜனை கவுரவ கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!