அட்சய திருதியை தினத்தன்று செய்ய வேண்டிய தானங்கள்!

அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. அந்த வகையில் என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்…

  • தண்ணீர் தானம் செய்தால் செல்வம் சேரும்.
  • பாய், படுக்கை தானம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • புத்தாடை தானம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும்.
  • குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலை உண்டாகும்.
  • சந்தனம் தானம் செய்தால் விபத்துக்களில் இருந்து தப்பலாம்.
  • தாம்பூலம் தானம் செய்தால் நாட்டை ஆளும் பாக்கியத்தைப் பெறலாம்.
  • தேங்காய் தானம் செய்தால் பித்ருக்களுக்கு நல்லது.
  • தயிர், மோர் தானம் செய்தால் உயர் கல்வி யோகம் கிடைக்கும்.
  • வெள்ளிக்குடத்தில் துளசி, வெற்றிலை கலந்து புனித நீரை தானமாக கொடுத்தால் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யலாம்.
  • செருப்பு தானம் செய்தால் மறைவுக்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கும்.
  • குடைகள் தானம் செய்தால் வாழ்வில் உள்ள தடைகள் அகலும்.
  • கோதுமை தானம் செய்தால் மழை பெய்து சுபீட்சம் உண்டாகும்.
  • உணவு தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும்.
  • பழ வகைகள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
  • ஏழைகளுக்கு தேவையானதை கொடுத்தால் ராஜயோக வாழ்க்கை கிடைக்கும்.
  • ஏழைகளுக்கு போர்வை மற்றும் ஆடைகள் தானம் செய்தால் உடல் நலம் சீராகும். நோய், நொடிகள் வராது.
  • மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைத்து கொடுத்தால் கல்விச் செல்வம் வளரும்.
  • உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்து, அகால மரணம் ஏற்படாது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!