தண்டவாளத்தில் உடல் சிதறி பிணமாக கிடந்த என்ஜினீயர்!

பாவூர்சத்திரம் ரெயில் தண்டவாளத்தில் என்ஜினீயர் உடல் சிதறி பிணமாக கிடந்தார். இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தண்டவாளத்தில் பிணம்
பாவூர்சத்திரத்தில் ெரயில்வே கேட் வடக்குப்புறம் நேற்று காலையில் நடந்து சென்ற சிலர், அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தின் அருகே இரண்டு துண்டாக சிதறி கிடந்த வாலிபரின் உடலை பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள் ளனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இதுபற்றி தென்காசி ெரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து ெரயில்வே போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.


என்ஜினீயர்
விசாரணையில், அந்த நபர் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அணைந்தபெருமாள் நாடாரூரைச் சேர்ந்த மூக்கன் மகன் சுப்பிரமணியன் (வயது 30) என்பதும், சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர் கொரோனா காலத்தில் பாவூர்சத்திரம் செல்வவிநாயகபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுதனா என்ற மனைவி மற்றும் 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இவரது கார், ெரயில் தண்டவாளம் அருகே உள்ள ஒரு கோவில் முன்பு நிறுத்தப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.


போலீசார் விசாரணை
இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் இவர் நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்று டீ குடித்து விட்டு வருவதாக கூறி சென்றவர் நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை என்றும், சில நாட்களுக்கு முன்பு இவர் மனைவி மற்றும் குழந்தையுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முன்தினம் காலையில் தான் ஊருக்கு வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.


இதுகுறித்து தென்காசி ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!