காதலனை கைப்பிடிக்க வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

காதலனை கைப்பிடிப்பதற்காக திருமண நேரத்தில் கடைசி வரை இளம்பெண் ஒருவர் போராட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கு நேற்று முன்தினம் கம்பம் பைபாஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தது.

காலையில் மணமக்கள் முகூர்த்த உடை உடுத்தி மணமேடையில் அமர்ந்தனர். புரோகிதர் மந்திரங்கள் ஓத திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதற்கு சிறிது நேரம் முன்பாக அங்கு வந்த இளம்பெண் ஒருவர் மணமகனும் நானும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் பல்வேறு ஊர்களுக்கு ஜோடியாக சென்று வந்ததாக தெரிவித்தார்.

மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என போராட்டம் நடத்தினார். திருமண மண்டபத்திற்கு வருவதற்கு முன்பாக போலீசில் புகார் தெரிவித்து போலீசாரும் மண்டபத்திற்கு வந்தனர்.

இளம்பெண் கூறுவதை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சிடைந்தனர். மணமகனின் உறவினர்கள் இளம்பெண்ணை மண்டபத்தை விட்டு வெளியே செல்லுமாறு எச்சரித்தனர்.

அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணமகனின் பெண் உறவினர்கள் இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வந்து மண்டபத்திற்கு வெளியே வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இளம்பெண் வலி தாங்க முடியாமல் கதறி அழுதார். இவை அனைத்தையும் மணமேடையில் இருந்த மணமகன் ஸ்ரீகாந்த் கல் நெஞ்சம் படைத்தவராய் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.

ஆனால் இளம்பெண்ணும் மணமகன் எப்படியாவது மனமிறங்கி தன்னை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அவ்வளவு அடி உதையை வாங்கிக்கொண்டார்.

இருப்பினும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்ட நேரத்தில் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். புகார் கொடுத்த இளம்பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் பெண்கள் அவரை இழுத்து வந்து தாக்குவதை எதுவுமே நடக்காதது போல் கண்டும் காணாமல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இளம்பெண்ணுக்கு இவ்வளவு கொடுமை நடந்தும் அங்கிருந்த அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். இளம்பெண்ணுக்கு ஒருவர்கூட ஆதரவாக இல்லாததால் கடைசியில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

காதலனை கைப்பிடிப்பதற்காக திருமண நேரத்தில் கடைசி வரை இளம்பெண் ஒருவர் போராட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!