ரஜினி மகள் குறித்து ஆபாச பேச்சு… வருத்தம் தெரிவித்த பிரபல நடிகர்!

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா குறித்து ஆபாசமாக பேசியதற்கு எதிர்ப்புகள் குவிந்த நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு

நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிவதாக கடந்த வாரம் அறிவித்தனர். இதுதொடர்பாக இருவரும் ஒரே மாதிரியான போஸ்ட்டை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர்.

வாய்க்கு வந்தப்படி

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ஐஸ்வர்யா தனுஷ் பிரிவுக்கான காரணம் என வாய்க்கு வந்தப்படி பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அனிருத்துடன் தவறான உறவு

அந்த வகையில் ஐஸ்வர்யாவுக்கு தனது மாமா மகனான இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணத்திற்கு முன்பே தவறான உறவு இருந்ததாக கூறினார். மேலும் திருமணத்திற்கு பிறகும் கூட இருவரும் தங்களின் தொடர்பை துண்டிக்காமல் இருந்துள்ளனர் என்றும் அள்ளி விட்டார். இதுகுறித்து தனுஷ் பல முறை எச்சரித்தும் இருவரும் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறினார்.

விளாசிய நெட்டிசன்ஸ்

ஐஸ்வர்யா அனிருத் இடையேயான தவறான உறவால் தனுஷ் அனிருத்திடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் என்றும் தனது வீடியோவில் கூறியிருந்தார். பயில்வான் ரங்கநாதனின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் திருமணம் நடைபெறும் போது அனிருத்தக்கு 14 வயதுதான் என்றும் திருமணத்தில் அவர் சிறு பையனாக இருந்த போட்டோவையும் ஷேர் செய்து விளாசினர்.

வழக்கிற்கு பயந்து

இதனை தொடர்ந்து அனிருத் தரப்பிலும் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடரப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் வசமாக சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்ந்த பயில்வான் ரங்கநாதன், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பயில்வான் ரங்கநாதன் மற்றவர்களின் கவுரவத்தை குலைக்கும் வகையில் பேசுவது இது முதல் முறையல்ல.

முதல் முறையல்ல..

ஏற்கனவே பல முறை டாப் நடிகர்கள் முதல் நகைச்சுவை நடிகர்கள் வரை பலர் குறித்தும் ஆபாசமாக பேசியுள்ளார். நடிகைகள் சிலருடன் நடிகர்கள் தவறான உறவில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அவரது ஒவ்வொரு வீடியோவுமே பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் ஐஸ்வர்யா குறித்து பேசி முதல் முதல் முறையாக வருத்தம் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!