மாமா-அத்தையை கொன்று தீவைத்து எரித்த நபர்… அதிர வைத்த காரணம்!

சகோதரனின் தற்கொலைக்கு தனது மாமா – அத்தை செய்த மாந்திரீகம் தான் காரணம் என நினைத்து அவர்களை நபர் கொன்று தீவைத்து எரித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் சவ்ராய் கிராமத்தை சேர்ந்தவர் தயராம் குலஸ்ட் (27). இவரது சகோதரர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துக்கொண்டார்.

இதற்கிடையில், சகோதரனின் தற்கொலைக்கு தனது மாமா – அத்தை உறவு முறையான சுமர் சிங் குலஸ்ட் (60) அவரது மனைவி ஷியாபாய் (55) ஆகிய இருவருமே காரணம் என தயராம் நினைத்துள்ளார்.

மாந்திரீக வேலைகளில் ஈடுபடும் மாமா – அத்தை தான் தனது சகோதரன் தற்கொலை செய்துகொள்ள காரணம் என நினைத்துள்ளார். அவர்கள் செய்த மாந்திரீக வேலையாலையே தனது சகோதரன் தற்கொலை செய்துள்ளான் என தயராம் கருதியுள்ளார்.

இந்நிலையில், சவ்ராய் கிராமத்தில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்கு சென்ற தயராம் அங்கு இருந்த சுமர் சிங் குலஸ்ட் மற்றும் அவரது மனைவி ஷியாபாயை கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளார்.

இதில், கணவன் – மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தான் செய்த இரட்டை கொலையை மறைக்க வீட்டிற்கு தீவைத்துவிட்டு அதனால் இருவரும் உடல்கருகி உயிரிழந்தது போன்று சதி செய்துள்ளார்.

தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து சுமர் சிங் குலஸ்ட் மற்றும் ஷியாபாயின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், கணவன் மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் ஹினொடியா என்ற கிராமத்தில் பதுங்கி இருந்த தயராம் குலஸ்டை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது சகோதரனின் தற்கொலைக்கு மாமா சுமர் சிங் குலஸ்டிசும் அவரது மனைவி ஷியாபாயுமே காரணம் என நினைத்ததாகவும் அதனால் அவர்கள் இருவரையும் கொலை செய்ததாகவும் தயராம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!