காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் எடுத்த விபரீதமுடிவு..!

பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் சந்தியா (வயது18) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த காசி மகன் கதிர்வேல் (24) கேட்டரிங் படித்து விட்டு வேலைபார்த்து வந்தார்.

இருவரும் அடிக்கடி பார்த்துக்கொண்டதால் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இருவரும் உயிருக்கு உயிராக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்தியாவை திருமணம் செய்துகொள்ள கதிர்வேல் முடிவு செய்தார். இதற்காக சந்தியாவின் பெற்றோர்களிடம் பெண் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு சந்தியாவின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சந்தியா செய்வதறியாது தவித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தியா வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காதலி இறந்த தகவலை கேட்ட கதிர்வேல் நொறுங்கிப் போனார். அவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். சோளிங்கர் அருகே உள்ள நரசிங்கபுரம் என்ற கிராமத்தில் உள்ள மலையடிவாரத்திற்கு சென்றார். காதலி இறப்பால் துடிதுடித்த அவர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சோளிங்கர் போலீசார் கதிர்வேல் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் ஜோடி உயிரை மாய்த்து மரணத்தில் ஒன்று சேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!