ஒரு டென்னிஸ் வீரரின் சோகம்… 250 வது முறையாக எனக்கு கொரோனா தொற்று!

250 வது முறை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் டென்னிஸ் வீரர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் கடந்த சில மாதங்களாக பல்வேறு வீரர் வீராங்கனைகள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிக்பாஷ் தொடர், ஆஷஸ் தொடர், ஜூனியர் உலக கோப்பை என பல்வேறு தொடர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த சில தினங்களாக டென்னிஸ் நட்சத்திரங்கள் பலர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், ஆண்ட்ரே ரூப்லெவ்மற்றும் பெலிண்டா பென்சிக் ,அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பிரெஞ்சு டென்னிஸ் நட்சத்திரம் பெனாய்ட் பைரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசை பட்டிய்லில் 46வது இடத்தில் உள்ள பெனாய்ட் பைரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாவது இது முதல் முறை அல்ல. தனக்கு 250 முறை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளதாவது :

என் பெயர் பெனாய்ட் பைரே, 250 வது முறையாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. என்னால் இந்த கொரோனா நோயை இனி சமாளிக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு சொகுசு விடுதிகளிலும் தனிமைப்படுத்தலிலே ஏன் வாழ்நாள் செல்கின்றது. இப்பொது நான் மனதளவில் நன்றாக உணரவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!