லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி என்ஜினீயர் பலி!

கார் மீது மோதி சாலையில் விழுந்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 23). இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி ஆகும். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையம் எதிரில் ஜெனரேட்டரோடு சாலையை ஆக்கிரமித்து நின்று கொண்டிருந்த காரின் பின் சக்கரத்தில் இவரது மோட்டார்சைக்கிள் மோதியது.

இதில் நிலை தடுமாறிய உதயகுமார், மோட்டார்சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்தார். பின்னால் வந்த சிமெண்டு கலவை லாரி, அவர் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய உதயகுமார், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான செல்வக்குமார்(38) என்பவரை கைது செய்தனர். கார் டிரைவரை தேடி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!