தலைகீழாக 19 வது மாடியில் தொங்கிய 82 வயது பாட்டி!

19 வது மாடியில் இருந்து தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார்.

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்கு மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த 82 வயது பெண்மணி ஒருவர் 19 வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார்.

அவர் அதிர்ஷ்டவசமாக 18வது மாடியில் இருக்கும் துணியை காயப்போடும் ரேக்கில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தார். அவருடைய கால்கள் 18வது மாடியிலும், உடல் பகுதி 17வது மாடியிலும் இருந்தன.

இதனையடுத்து இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பெண்மணியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்டனர். நல்ல வேளையாக இதில் பெண்மணிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!