முகத்தின் சிகப்பழகை இருமடங்கு அதிகமாக்கும் புளி… இப்படி செய்யுங்க..!


விழாக்காலங்களில் வீட்டில் பலகாரங்களுக்குப் பஞ்சமே இருக்காது. அதேபோல் அழகு சார்ந்த விஷயங்களிலும் நாம் அதிகஅளவில் அக்கறை செலுத்துவோம். ஆனால் அழகைப் பராமரிக்க தனியே மெனக்கெடாமல் நாம் வீட்டில் சாப்பிட வைத்திருக்கும் பொருள்களையே அதற்கும் பயன்படுத்தினால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.

ஆம். அப்படி என்னென் இருந்தால் சரும அழகை எளிதாகக் கூட்டலாம்?

கடலைமாவு

விழாக்காலங்களில் செய்யும் பலகாரங்கள் பலவற்றிலும் நாம் நிச்சயம் கடலைமாவு சேர்ப்போம். அதனால் அந்த சமயத்தில் கட்டாயம் நம்முடைய வீட்டில் கடலைமாவு இருக்கும். அதைக்கொண்டு நம்முடைய அழகை பல மடங்கு அதிகரிக்க முடியும். கடலைமாவு தலைமுடி மற்றும் முகம் இரண்டையும் அழகூட்டும். அந்த கடலைமாவுடன் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து முகத்தில் அப்ளை செய்து சிறிதுநேரம் கழித்து முகத்தைக் கழுவவும். முகம் பொலிவுடன் இருப்பதை நீங்களே நன்கு உணர்வீர்கள்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சேர்த்து நன்மை பயக்கும். கடலையை அரைத்து முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால், வயது முதிர்ந்த தோற்றத்தைத் தவிர்த்து சருமத்தை அழகூட்டும்.

தயிர்

தயிர் எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவுப்பொருள். இது ஏராளமான சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும். தயிர் சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராகவும் கரும்புள்ளிகளைப் போக்கவும் பயன்படுகிறது. தலைமுடிக்கும் தயிர் மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகத் திகழ்கிறது. தலைமுடியை மிருதுவாக வைத்திருப்பதோடு பொடுகுத்தொல்லையில் இருந்தும் விடுதலை தரும்.


புளி

புளிப்பு என்றாலே சப்புக்கொட்டி சாப்பிடும் நாம் அந்த புளியை வைத்து சருமத்தின் நிறத்தை இரண்டு மடங்காக ஆக்க முடியும். புளியை நன்கு திக்காகக் கரைத்து சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிய பின், சிறிதுநேரம் குளிரவைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். புளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி3 சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்திருக்கும். சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும். புளியைக் கரைத்து அதில் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தலைமுடியை அலசப் பயன்படுத்தினால் தலைமுடியை பிசுபிசுப்பிலிருந்து காக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை எப்போதுமே நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு பொருள். எலுமிச்சையை சிறு துண்டாக வெட்டிக் கொண்டு அதை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். இது சருமத்துக்குப் பொலிவைத் தருவதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் செய்யும்.

தேன்

தேன் மிகச்சிறந்த ஆன்டி- பாக்டீரியலாகப் பயன்படுகிறது. இது வறண்ட, எண்ணெய் பசையுள்ள என எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது. அதனால் தயிர், லெமன், கடலைமாவு, தக்காளி, ஓட்ஸ் என எவற்றுடனும் தேனைச் சேர்த்து முகத்துக்குப் பயன்படுத்தலாம்.

ஓட்ஸ்

உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை உடையவர்கள் தங்களுடைய உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்கிறார்கள். அந்த ஓட்ஸை தேன் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் மாஸ்க் போட்டு, அரைமணி நேரம் கழித்து கழுவ முகம் பளிச்சென ஜொலிப்பதை நீங்களே கண்கூடாக உணர்வீர்கள்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!