விநாயகர் சதுர்த்தியன்று கணபதிக்கும் 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. அவ்வாறாக அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:-
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-
- முல்லை இலை: அறம் வளரும்
- கரிசலாங்கண்ணி இலை: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
- வில்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
- அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
- இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடையலாம்.
- வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
- நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.
- கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.
- அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
- எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.
- மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்
- மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
- தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
- மரிக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.
- அரசம் இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
- ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.
- தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.
- அகத்தி இலை: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!