ஆன்லைனில் பாடம் படிக்காத 4 வயது மகன்… தாய் செய்த பயங்கரம்.!

ஆன்லைனில் பாடம் படிக்காததால் 4 வயது மகனை கொன்று, தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட மற்றொரு பயங்கர சம்பவம் மராட்டியத்தில் நடந்து உள்ளது.

மராட்டிய மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள சாய் சித்தி அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் சாகர் பாட்டக். இவரது மனைவி சிக்கா (வயது 32). இவர்களது மகன் ரிதான்(4). மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான். சம்பவத்தன்று சிறுவன் ரிதான் ஆன்லைன் பாடத்தை கவனிக்காமல் விளையாட்டு தனமாக இருந்தான். இதனால் ஆத்திரமடைந்த சிக்கா அங்கிருந்த தலையணையால் சிறுவன் ரிதானின் முகத்தில் வைத்து அமுக்கி உள்ளார். இதில் சிறுவனின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிக்கா தனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே நவிமும்பை ஐரோலியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற கட்டாயப்படுத்திய தாயை அவரது 15 வயது மகள் கொன்ற பயங்கரத்தை தொடர்ந்து, நாசிக்கில் ஆன்லைனில் பாடம் படிக்காத மகனை கொன்று தாய் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!