சமோசாவால் அநியாயமாக வாலிபரின் உயிர்பறிபோனது!

மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்த்தப்பட்டதால் கடைக்காரரிடம் தகராறு செய்த வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் பல ஆண்டுகளாக அனுப்பூர் நகரில் உள்ள கடையில் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபத்தில் அந்த வாலிபர், நண்பருடன் சமோசா சாப்பிட சென்றார். அப்போது ரூ. 15-க்கு விற்கப்படும் 2 சமோசாவின் விலை ரூ.20 ஆக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வு குறித்து அந்த வாலிபர் கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அந்த வாலிபர் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!