வீடும் பூட்டல்.. போன் சுவிட்ச் ஆப்.. மணிகண்டனை வலைவீசி தேடும் போலீசார்.!

மலேசிய பெண்ணான நடிகை சாந்தினி முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கர்மாக்கினார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். நடிகை சாந்தினியின் புகாரை விசாரித்த போலீசார், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் விசாரணையில் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததும். மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடும் பூட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், அவரின் உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களும் தலைமறைவாகியுள்ளனர். அதோடு அனைவரின் செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தேடுதல் வேட்டையில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.- source: malai.murasu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!