கொரோனாவால் கஜினி, சுள்ளான் பட தயாரிப்பாளர் மரணம்..!

சூர்யாவின் கஜினி, தனுஷின் சுள்ளான் படங்களை தயாரித்த சேலம் சந்திரசேகர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி என சிலர் இறந்தும் போய் உள்ளனர்.

அந்த வகையில், தற்போது சூர்யாவின் கஜினி, தனுஷின் சுள்ளான் படங்களை தயாரித்த சேலம் சந்திரசேகர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் பிப்ரவரி 14, சபரி, கில்லாடி போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!