கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சியான பேஸ் பேக்!

அதிக வெப்பம் கொண்ட காலத்தில் சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தேவையான அளவு தண்ணீர் பருகுவது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான உணவுமுறை, மிதமான உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

கோடைக்கேற்ற குளிர்ச்சியான பேஸ் பேக்
பேஸ் பேக்
பருவ கால மாற்றங்களின் போது உடலில் அதிக அளவு பாதிக்கப்படுவது சருமம் தான். அதிக வெப்பம் கொண்ட காலத்தில் சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தேவையான அளவு தண்ணீர் பருகுவது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான உணவுமுறை, மிதமான உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். அவை தவிர சருமத்தில் பூசப்படும் பேஸ்பேக், மாஸ்க் பழங்களை கொண்டு பேஸ்பேக் தயாரித்து பயன்படுத்துவது நல்ல பலன்களை அளிக்கிறது. சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் சில குறிப்புகள்…

வெள்ளிரி மற்றும் பால் பேக்

ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிச்சியில் போட்டு அதனுடன் 50 மிலி பால் மற்றும் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

வெள்ளிக்காயின் சாறு சரும பாதிப்புகளை குணமாக்குகிறது. மற்றும் வெயிலால் கருத்த சருமத்தை அதன் இயல்பு நிலைக்கு திரும்ப செய்கிறது. இந்த பேஸ்பேக் சருமத்துக்கு புத்துணர்வை அளித்து வறட்சி ஏற்படுத்தாமல் மென்மையாக பராமரிக்க உதவுகிறது.

மாம்பழ மற்றும் தயிர் பேக்

நன்குபழுத்த மாம்பழத்தின் சதைப்பகுதியை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்து நன்கு குழைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் முகத்தை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்கள் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை காக்கின்றன. சருமத்தின் இயல்பான தன்மையை மீட்க உதவுகின்றன. முகப்பரு ஏற்படாமல் தடுக்கின்றன. தயிரிலுள்ள லாக்டிக் ஆசிட் சருமத்தை மென்மையாக்குகிறது.

தக்காளி பேக்

2 டீஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கெட்டியான கலவையாக தயார் செய்யவும். இந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவலாம்.

தக்காளியில் நிறைய உயிர்சத்துக்களும், வைட்டமின் சியும் உள்ளன. அதிலுள்ள அஸ்கார்பிக் ஆசிட் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தின் துளைகளுக்குள் பரவி சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.

நெல்லிக்காய் தயிர் பேக்

2 டீஸ்பூன் அரைத்த நெல்லிக்காய் விழுதுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். இந்த கலவை நன்றாக உலர்ந்ததும் முகத்தை கழுவவும்.

நெல்லிக்காய் சருமத்தில் கொலாஜின் உற்பத்தியை அதிகரித்து இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சருமத்தின் தளர்ச்சியை அகற்றி அதன் இயல்பான நிலைக்கு மாற்றவும் உதவுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!