மிருகமாக மாறிய 17வயது ரஷ்ய சிறுவன்.. வெறிச்செயலால் போலீஸ் அதிர்ச்சி .!!

ரஷ்யாவில் பள்ளிக்கு போகச்சொல்லி வற்புறுத்தியதால் தன் குடும்பத்தையே கோடாரியால் கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

ரஷ்யாவில் 17 வயது சிறுவனான வாதிம் கோர்பூனோவ் அழகான சிறிய குடும்பத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவரின் பெற்றோர்கள் வாதிம்மை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்கள். ஆனால் இசையின் மேல் அதீத நாட்டம் கொண்ட வாதிம் பள்ளி செல்ல மறுத்து பெற்றோர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடுங்கோபத்தில் இருந்த வாதிம் தந்தை வேலைக்கு சென்றதை பயன்படுத்தி,முதலில் தாயாரையும் 12வயது சகோதரியையும் கொன்றுள்ளார்.

பின்னர் வேலைக்கு சென்ற தந்தை திரும்பி வந்தவுடன் வாதிம் கோடாரியால் அவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் முகத்தை அடையாளம் தெரியாதவாறு சிதைத்துள்ளார். இச்சம்பவத்தினை அறிந்து விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த சடலம் வாதிம் என்ற கண்ணோட்டத்தில் விசாரித்துள்ளார்கள். ஆனால் தடவியலாளர்கள் செய்த சோதனையில் இறந்தது வாதிமின் தந்தை என்பதை கண்டறிந்துள்ளார்கள். இந்நிலையில் வாதிமை தேடிவந்த போலீசார் அப்பகுதியிலிருந்து சுமார் 225 கிலோமீட்டர் தொலைவில் கைது செய்துள்ளார்கள். பிறகு சிறுவன் கொலையை ஒத்துக்கொண்டுள்ளார்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!