10கோடி பாலோயர்கள்… இன்ஸ்டாகிராமில் சாதனை செய்த முதல் இந்தியர்..!

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடருபவர்களில் நான்காவது விளையாட்டு வீரர் கோலி ஆவார்.இன்ஸ்டாகிராமில் 7.5 கோடி பின்தொடர்பவர்களை பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

இன்ஸ்டாகிராம் தவிர, டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற பிற சமூக ஊடக தளங்களிலும் கோலியை அதிக ரசிகர்களைப் பின்தொடர்கிறார்கள்.தற்போது வரை அவருக்கு டுவிட்டரில் 4.08 கோடி ஃபாலோயர்கள் உள்ளனர், அதே நேரத்தில் பேஸ்புக்கில் 3.6 கோடிக்கும் அதிகமான லைக்குகள் உள்ளன.

இதனையொட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை 6 கோடி பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் 26.6 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட விளையாட்டு வீரராக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ முதல் இடத்தில் இருக்கிறார்.பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி மற்றும் பிரேசிலின் நெய்மர் முறையே 18.6 கோடி, 14.7 கோடி பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

10 கோடி பாலோயர்களை கிளப்பில் ஜுவென்டஸ் ஸ்ட்ரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர், லியோனல் மெஸ்ஸி, ஹாலிவுட் நடிகரும் முன்னாள் மல்யுத்த வீரருமான டுவைன் (தி ராக்) ஜான்சன், அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் பியோனஸ் மற்றும் அரினா கிராண்டே ஆகியோரும் உள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!