கழிவுநீர் தொட்டியில் பிணமாக மீட்கப்பட்ட பெண்… சிக்கிய காதலன் பகீர் தகவல்..!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலம்,வயது 29. இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீலம் விவாகரத்து செய்தார். இதன் பின்னர் ரவி என்பவருடன் நீலமுக்கு நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நீலம் காணாமல் போனார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் நீலம் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலில் அதிக அளவு நகைகளும் காணப்பட்டன. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ரவியை பிடித்து விசாரித்தபோது, கொலைக்கு காரணம் நான் தான் என்று ஒப்புக் கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், “நீலமுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அடிக்கடி சண்டை போட்டோம், இரு தினங்களுக்கு முன்னர் சண்டை முற்றியது. அவரை கொலை செய்து உடலை கழிவுநீர் தொட்டியில் போட்டு வைத்தேன்” என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ரவி அளித்துள்ள வாக்கு மூலத்தை ஆதாரமாகக்கொண்டு போலீசார் ரவியை கைது செய்துள்ளனர். இந்த செய்தி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!