மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்த தம்பதியினர்..! ஆந்திராவில் பரபரப்பு


கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ஒரு தம்பதியினர் தங்கள் பெற்ற மகள்களை அடித்து கொலை செய்துவிட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து அற்புதம் விளைவிப்பார்கள் என்று நம்பிய சம்பவம் ஒன்று ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் மதனபள்ளி என்ற பகுதியில் புருஷோத்தமன்-பத்மஜா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இருவருமே கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 27 வயதில் அலேக்யா என்ற மகளும் 22 வயதில் திவ்யா என்ற மகளும் உள்ளனர் என்பதும், இருவரும் உயர் படிப்பு படித்து வருகின்றனர் என்பதும் கொரோனா விடுமுறை காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர்களுடைய வீட்டில் பூஜைகள் நடந்து வந்ததாகவும் அற்புதங்கள் நிகழ்த்த போவதாகவும் கூறி வந்த நிலையில் நேற்று இரவு திடீரென தனது இரண்டு மகள்களையும் அடித்து கொலை செய்த இந்த தம்பதி, இறந்த உடலை நிர்வாணப்படுத்தி பூஜை செய்ததாக தெரிகிறதுு.

புருஷோத்தமன் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக பேராசிரியர் புருஷோத்தமன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது இரண்டு மகள்களையும் நிர்வாணப்படுத்தி பூஜை செய்து வந்ததை பார்த்து அதிர்ந்தனர்.

இது குறித்து பேராசிரியர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை செய்தபோது தங்கள் மகள்கள் இறக்கவில்லை என்றும் ஒரு இரவு பொறுத்து பாருங்கள், இருவரும் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார்கள் என்றும் கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இரண்டு மகள்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதுு.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் பேராசிரியர் தம்பதிகள் தங்கள் சொந்த மகள்களையே அற்புதங்கள் நிகழும் என்ற மூடநம்பிக்கையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!